Monday, November 26, 2012

உசில உசில.... உயிர்நிலையாம் உசிலமரம்

உசிலமரத்தினால் செய்த நிலை உயிரோட்டம் உடையது என்று கிராமங்களில் உசிலமரத்தினாலான நிலை பயன்படுத்துவதை பார்க்கலாம், அவற்றின் இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலையை காயவைத்து பொடிசெய்து எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும். பட்டை, பிசின் மாந்தத்திர்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இப்படிப்பட்ட உசிலமரம் அரியவகை மரங்களில் ஒன்றாகிவிட்டது, இளைய தலைமுறையினர் பலருக்கு உசிலமரம் எப்படிஇருக்கும் என்பதேதேரியது என்பது வருத்தத்திற்குரியவிஷயம், இம்மரம் வறட்சிதாங்கி வளரக்கூடியது எனவே தரிசு நிலங்களிலும் சாலை ஓரமாகவும் இம்மரங்களை வளர்ப்பதின் மூலம் அவற்றை அழிவிலிருந்து மீட்கமுடியும்...