Wednesday, December 25, 2013

கலப்பு மரம் வளர்ப்பு


தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளால்  விவசாயிகள் மத்தில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன  செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான்  கலப்பு மரம் வளர்ப்பு

ஒரே வகையான  வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பலவருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன்மூலம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம்,  ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ், மலைவேம்பு  போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடி இடைவெளில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும், குமிழ் மருதாம்பு மரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டம்முரையாக அறுவடைக்கு வரும்,  தேக்கு, வேங்கை, மகோகனி போன்ற மரங்களை 20, 25 ஆணுகளுக்குபின் அறுவடை செய்யலாம்.

நடவு முறையை பார்போம்

மரம் நடும் இடத்தை இரண்டுசால் உளவு ஓடியபின் 2 * 3 அடி அளவுள்ள குழிகளை 5 அடிக்கு 5 அடி இடைவெளில் எடுத்து அதில் தொளுவுரமிட்டு சிலநாள் ஆரபோடவேண்டும், அதன்பின் தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்யலாம், வரப்பு ஓரங்களில் தேக்கு, வேங்கை, மகோகனி, ரோஸ்வூட், மாஞ்சியம்,  ஆச்சா போன்ற மரங்களை 15 அடிக்கு 15 அடி இடைவேளிலும், உட்புறம் 15 அடிக்கு 15 அடி  இடையில் குமிழ், மலைவேம்பு  போன்ற மரங்களை சில வரிசைகள் நடவேண்டும் இடைப்பட்ட பகுதில் சிங்குனிய சவுக்கு 5 அடிக்கு 5 அடி (படத்தில் உள்ளதுபோல்) இடைவெளில் நடவேண்டும். இம்முறையில் மரம் வளர்க்கும் போது  நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானம் கிடைப்பதுடன் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளும் வருவதில்லை.

மரம் வளர்ப்போம் வளம்பெறுவோம்... 

Thursday, October 24, 2013

மரங்களில் படிந்திருக்கும் தங்கம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் யூகலிப்டஸ் மர இலைகளில் தங்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

யூகலிப்டஸ் மரத்தின் இலையின் நரம்புகளில் தங்கம் காணப்படுகிறது. இம்மரத்தின் வேர்கள் பூமியில் பல மீட்டர் ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சிக்கொள்ளும் சக்திபடைத்ததாகும். 

சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும் யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் 40 மீட்டர் வரை பூமிக்கு அடியில் சென்று நீரை தேடும். இம்மரத்தின் வேர்கள் தங்கம் போன்ற உலோகங்கள் புதைந்து கிடக்கும் இடத்தையும் தாண்டி தண்ணீர் தேடிச் செல்லும் தன்மை கொண்டவையாகும். அவ்வாறு தேடும் வேர்கள் பூமிக்கு அடியில் இருக்கும் நீரை உறிஞ்சும்போது அதனுடன் சேர்ந்து அந்த இடங்களில் இருக்கும் தங்கத்தையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளுமாம். 

மேலும் எந்த இடங்களில் பெருமளவில் தங்கம் புதைந்திருக்கும் என்ற தகவலையும் இந்த கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது. 

தங்கம் தாவரங்களின் செல்களுக்குள் இருக்கும் தன்மையில்லாததால் நீருடன் உறிஞ்சப்படும் தங்கமானது மரத்தின் உச்சியான இலைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும் யூகலிப்டஸ் மர இலையில் மிக மிக சிறிய அளவில்தான் தங்கம் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி:http://tamil.webdunia.com

Thursday, October 17, 2013

மரம் பெ தங்கசாமி - குறுங்காடு வளர்ப்பில் முன்னோடி

தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.

ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு - எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது - குறுங்காடு வளர்ப்பு!

பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்... நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்... இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.
ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.

“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா... வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்... சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.

அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே...’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.
அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி... மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.

ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.
மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் - பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?

நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க - அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” - தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.

பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”

நன்றி: தமிழ் தி இந்து (ஆசிரியர் - சமஸ் )

Tuesday, October 15, 2013

600 க்கும் அதிகமான மூலிகைசெடி வகைகள் - செ.சி.ப மூலிகை பண்ணை


சின்னதாக இருமல் தும்மல் வந்தாலே ஆங்கில மருந்துகடைகளை நாடிச்செல்வோர் மத்தில் தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்.  இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர் திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க  கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும்  கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார் இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும்  மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார். மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார். கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மூலிகை வளர்ப்பு குறித்த சான்றிதல் படிப்பும் முடித்துள்ளார்.

திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின் பெயர்கள்:
       சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை,  நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்),  அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில்,  அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி   தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை   நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்),  ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்

திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்:

ஆடாதோடை - காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்

சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும்

சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) - சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 

7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு,  மா, பலா, கிலா 

மருத்துவ மரங்கள்: 
வேம்பு, கும்பகொடளி, ஆலமரம்,  மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை 
ஆராய்சி மையம், 
79,காமராசர் சாலை, கீரமங்கலம், 
புதுக்கோட்டை மாவட்டம் - 614 624
9629601855

Saturday, September 21, 2013

சமவெளிப் பகுதிலும் மிளகு சாகுபடி செய்யலாம்!

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் அனுபவங்கள் 
(தமிழக விவசாயி உலகம் மாத இதழுக்காக நான் எழுதியது)


பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் மிளகை சமவெளிப் பகுதியில் தென்னைக்கு ஊடு பயிராக சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்!

மிளகு வாசனை பொருட்களில் ஒன்று. இது குறைந்த அளவு தண்ணீரில் மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இதுவரை மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்துவந்த மிளகு பயிர் சில வருடங்களாக சமவெளி பகுதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்டு முதல் தரமான மிளகு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அப்படி மிளகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்தான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் திரு.இராஜகண்ணு அவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு-பட்டிபுஞ்சையை சேர்ந்தவர் இராஜகண்ணு ஆசிரியர் (ஒய்வு ) அவரது தோட்டத்தில் தென்னைக்கு ஊடுபயிராக மிளகு வரப்பு ஓரங்களில் பலவிதமான மரங்கள் என்று பசுமை போர்த்தி உள்ளது அவரது  தோட்டம் , 25 வயதுடைய செஞ்சந்தனம், சந்தனவேங்கை போன்ற மரங்களை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

ஆசிரியரிடம் மிளகு  சாகுபடி பாடம் கேட்போமா  

நான் விவசாய குடும்பத்தசார்ந்தவன் எங்க பாட்டன் பூட்டன் காலம் தொட்டே விவசாயம் தான் எங்க குழதொளில், நான் படிசிட்டு வாத்தியார் வேலை பார்த்தாலும்  விவசாயத்தையும் பார்த்துகிட்டேன், என்மகனும் பட்டய படிப்பு முடிசிட்டு  விவசாயம் பண்ண உதவியா இருக்கார், இப்போ ஓய்வு பெற்றபின் முழு நேரமும் விவசம் செய்றேன் எங்களுக்கு மொத்தம் 15 ஏக்கர் நிலமிருக்கு  10 ஏக்கர்ல தென்னை இருக்கு  5 ஏக்கர்ல நிலத்துல நெல் உளுந்து நிலக்கடலைன்னு பயிர் செய்வேன், தென்னைக்கு வரப்பு பயிரா மரங்களை 25 வருசதுக்கு முன்னாடி நட்டேன், 1998-ல தென்னைக்கு ஊடுபயிரா 1 ஏக்கர்ல மிளகு போட்டேன் நல்லமகசூல் கிடைச்சுது அதிலிருந்து இன்றுவரை மிளகு சாகுபடி பன்றேன், இப்போ மொத்தம் 3 ஏக்கர்ல மிளகு இருக்கு என்றவர் சாகுபடி நுட்பங்களை விளக்கினார்.

மிளகு செடி நட்டு இரண்டம் வருடத்திலேயே சிலசெடிகள் மகசூல் கொடுத்தாலும் மூன்றம் ஆண்டில்தான் முழுமையான மகசூல் கிடைக்கும். மிளகு செடியை எல்லோரும் தென்னை மரத்தில்தான் படரவிடுவார்கள் நானும் ஆரம்பத்தில் அப்படிதான் செய்தேன் சரியான மகசூல் இல்லை,  தென்னை 25* 25 அடி இடைவெளில் இருக்கு அதனால இரண்டு மரங்களுக்கு நடுவே 7அடிக்கு 7அடி இடைவெளி விட்டு கிலுவை, வாதநாராயணன், நஞ்சுமுருங்கை போன்ற குருவகை மரங்களை நட்டேன் 8அடி உயரத்தில் மரங்களை வெட்டிவிடுவேன் அதில் மிளகு செடியை படரவிட்டுளேன் நன்றாக காய்கிறது மிளகு பறிப்பதும் சுலபம்.

என்கதோட்டதுல கரிமுண்டா(நாட்டுரகம்), பன்னியூர் 1,  பன்னியூர் 2,பன்னியூர் 3 போன்ற ராகங்கள் இருக்கு பஞ்சகவியம் கொடுக்குறதால மிளகும் நல்ல திரட்சியா  இருக்கு , மிளகு சாகுபடில முதல் மகசூலா 60 கிலோ கிடசுது அதைவித்த காசுல ஞாபகதார்தம 12கிரம் மோதிரம் வாங்கி போட்டிருக்கேன். ஆரம்பத்துல வச்சமிளகு 1 ஏக்கர்  செடியில இருந்து சென்ற வருடம் அதிகபட்சம 400 கிலோ கிடசுது. வர்ரவருமானதுல 4 ஒரு பங்கு செலவு போனாலும் மிதமெல்லாம் லாபம்தான் மிளகு, கிலுவை, நஞ்சுமுருங்கை இலைசருகு கொட்டி மக்குரதால தென்னையும் நல்ல காய்கிறது என்று பாடத்தைமுடித்தார்.  

செஞ்சந்தனம் சந்தனவேங்கை மரங்களை விக்குரதுலத்தான் கொஞ்சம் பிரச்சினை இருக்கு, செஞ்சந்தனம் மரத்துக்கு வனத்துறையில் மரம் வெட்டுவதற்கான அனுமதி(கட்டிங் ஆடர்) வாங்க முடியல வர்ரவியாபரிங்க எல்லாம் கட்டிங் ஆடர் வாங்கித்தாங்க வாங்கிறோம்முனு சொல்றாங்க ஒருவருடம மரத்தவிக்க போராடிகிட்டு இருக்கேன் முடியல என்று விடைபெரும்போடு கூறினார். 

இராஜகண்ணு ஆசிரியர்
9443005676

Monday, September 16, 2013

உலகத்திலேயே மிகப்பெரிய... தேக்கு மரம் !

உலகத்திலேயே மிகப்பெரிய தேக்கு மரம் என்ற புகழுடன் அறியப்படும் இந்த ‘கன்னிமரம்’ எனப்படும் தேக்கு மரம் நீலம்பூரின் பிரதான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. பாலக்காடு மாவட்டத்துக்குள் வரும் பரம்பிக்குளம் காட்டுயிர் பூங்காவில் இந்த தொன்மையான மரம் அமைந்துள்ளது. நீலம்பூர் நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்திலுள்ள இந்த மரத்தை சாலை மார்க்கமாக சென்றடையலாம். இந்திய அரசாங்கம் இந்த மரத்திற்கு ‘மஹாவிருக்ஷ புரஸ்கார்’ எனும் விருதினை அளித்துள்ளது.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மரத்தின் அடிப்பாகம் 6.48மீ சுற்றளவைக் கொண்டுள்ளது. 400 வருடங்கள் வயதுடையதாக கருதப்படும் இந்த மரம் நுனி வரை 48.75 மீட்டர் உயரத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது, ஏறக்குறைய 160 அடி உயரம். அதற்குமேல் இதன் பிரம்மாண்டத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

இப்பிரதேசத்தில் வசிக்கும் பூர்வகுடிகள் மத்தியில் ஒரு முக்கியமான ஆன்மீக அடையாளமாகவே கருதப்படும் இந்த தொன்மையான மரத்தை சுற்றி பல கதைகள் விளங்கிவருகின்றன.

அவற்றில் ஒன்று - இந்த மரத்தை வெட்ட முனைந்தபோது இதிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது - என்பதாகும். அதன் பின் இந்த மரத்தை உள்ளூர் மக்கள் ‘கன்னி மரம்’ என்றே அழைக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.


நன்றி: பசுமை விகடன் 

Sunday, July 28, 2013

பல்லாவரத்தில் பகல்கொள்ளை -- கொள்ளைலாபம்பெரும் நாற்றுப்பண்ணையாளர்கள்


                             எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த நாட்டிலேலே....

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள், மலர்செடிகளின்மீதும் மரங்களின் மீதும் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் தாவரங்கள் பற்றிய அறியாமையையும் பயன்படுத்தி காசுபண்ணுது ஒருகூட்டம், வாரம்தோறும் வெள்ளிகிழமை பல்லாவரத்தில் சந்தைகூடுவது வழக்கம் அங்கு பலவிதமான பொருட்களும் கிடைப்பதால் கூடுது மக்கள்கூட்டம், இங்கு பலசெடிகள் விற்பணைநிலையங்களில் மலர்செடிகள் விற்பனையும் அமோகம் விலைவாசியும் அமோகம், மலர் செடிகளின் விலை ரூ 30 ஆரம்பித்து 100, 200 செடிகளுக்கு தக்கவாறு விலை நிர்ணயிக்கபடுகிறது, உதாரணத்திற்கு ஒரு செஞ்சந்தன கன்றின் விலை ரூ300 இங்குதான் பகல்கொள்ளை நடக்கிறது என்று நான்சொல்கிறேன், ஏனென்றால் அருகாமையில் உள்ள உள்ளகரம் மற்றும்  ஊர்பக்கம் ஈஷா நாற்றுப்பண்ணையில்  ஒரு செஞ்சந்தன கன்றின் விலை ரூ 10 மட்டுமே, இங்கோ பலா,நெல்லி, மாதுளை, மகோகனி போன்றகன்றுகளின் விலை ரூ160, கொய்யா முந்திரி நாற்றுகளின் விலை ரூ120, சந்தானம் ரூ250, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிறபகுதிகளில் உள்ள நாற்று பண்ணைகளில் ஒரு கன்றின் விலை ரூ 10 தான் ஈஷாவில் ரூ 7, சந்தனம் ரூ30 லிருந்து ரூ50 தான் இப்படிஇருக்க  பல்லாவரத்தில் மட்டும் ஏன் இந்தவிலை, கடன் அட்டைகளை உரசிவிட்டு பொருள்வாங்கும் மக்கள்தானே என்ற மெத்தனமா?

போதுசனங்களுக்கும் என்னபொருள் வாங்குகிறோம் அதன்  விலைஎன்ன? பொருளின் தரமென்ன! என்பதுபற்றி எல்லாம் கவலை இல்லை எங்கு சென்றாலும் கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கவேண்டும், இதைதான் ஏமாற்றுபவர்கள் மூலதனமாக பயன்படுத்துகிறார்கள்.

மக்களுக்கு நாற்றுப்பண்ணைகள்  பற்றிய தகவலும் தெரிவதில்லை, நாற்று உற்பத்தி பண்ணவும் தெரிவதில்லை, நாம் சாப்பிடும் கொய்யா மாதுளை விதைகளை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினாலே ஒருவாரத்தில் கன்றுகள் முளைக்கஆரம்பித்துவிடும் ஒரு பலத்தில் இருந்து 100க்கும் அதிகமான நாற்று கிடைக்கும், முந்திரி, பலா, நெல்லி, மகோகனி என அனைத்தும் இம்முறையில்தான் நாற்று தயாரிக்கபடுகிறது, ஐந்து ரூபாய்க்கு வாங்கும் கொய்யா பழத்தில் 200 நாற்றுகளுக்கு மேல் கிடைக்கும் என்றால் மூன்று மாதம் வளர்ந்த ஒரு கொய்யா செடி ரூ 120 என்றால் 5 ரூபாய் பழத்திலிருந்து லாபம் என்னவென்று பாருங்களேன், மக்களுக்கு தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிகொண்டுதான் இருப்பார்கள்....    

Friday, June 28, 2013

நாற்றுகளுக்கு நர்சரி கிராமங்கள்

கல்லுக்குடி இருப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமமான இது, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சுற்றுப்பட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்குப் பரிச்சயமான கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் நாற்றுப்பண்ணைகள்தான் இக்கிராமத்தை உலகுக்கு அடையாளப்படுத்துகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வறுமை தாண்டவமாடிய கிராமம் இது. தண்ணீர் பற்றாக்குறையால், ஊர் முழுக்கவே காட்டுக்கருவை மரங்கள்தான் மண்டிக்கிடந்தன. இன்றோ… நாற்றுப் பண்ணைகளாக மலர்ந்திருக்கின்றன. தனிநபர்கள் மட்டுமல்லாது, சுயஉதவிக் குழுக்களும் இக்கிராமத்தில் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன.
அரை ஏக்கர் பரப்பு முதல், ஒரு ஏக்கர் பரப்பு வரையிலான சிறியதும் பெரியதுமான நாற்றுப் பண்ணைகள்… சுமார் எழுபது வகையான மலர் நாற்றுகள்… 65 வகையான மரக்கன்றுகள்… என்று இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான நாற்றுகள் விற்பனையாகின்றன.
அரை ஏக்கர் நிலத்தில் நாற்றுப் பண்ணை நடத்தி வரும் முத்து, ”கிணத்தை நம்பித்தான் விவசாயம் நடந்துகிட்டிருந்துச்சு. ஒரு கட்டத்துல தண்ணீர் மட்டம் குறைஞ்சுக்கிட்டே போயி, சுத்தமா வறண்டு போச்சு. அதனால, ஊரே விவசாயத்தை விட்டு ஒதுங்கிட்டோம். வனத்துறைக்காரங்க அப்பப்போ காடுகள்ல கூலி வேலைக்குக் கூப்பிடுவாங்க. அதை வெச்சுதான் பிழைப்பை ஓட்டிக்கிட்டுருந்தோம்.
”நானும் என்னோட வீட்டுக்காரரும் சேர்ந்து அரை ஏக்கர்ல நாத்துப் பண்ணை போட்டிருக்கோம். குரோட்டன்ஸ் செடிகளையும், பழமரக்கன்னுகளையும் உற்பத்தி செய்றோம். குடும்பமே சேர்ந்து கடுமையா உழைச்சா… அதுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்” என்று அனுபவ வார்த்தைகளில் சொன்னார் உடைச்சி.
அவரைத் தொடர்ந்து பேசிய கருப்பையா, ”தரமானக் கன்னுகளை உற்பத்தி பண்றதாலதான் ரொம்ப தூரத்துல இருந்துகூட தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம்கூட வர்றாங்க. திறந்த வெளியில இயற்கைச் சூழல்லயே தொழுவுரத்தை மட்டும் பயன்படுத்தி கன்னுகளை உற்பத்தி பண்றதால, எந்த இடத்துல கொண்டு போய் நட்டு வெச்சாலும், தாக்குப் பிடிச்சு வளந்துடும். பசுமைக் குடிலுக்குள்ள ரசாயன உரம் பயன்படுத்தி உற்பத்தி பண்ற கன்னுகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது.
மூன்றரை இஞ்ச் அகலம், 5 இஞ்ச் உயரம் இருக்குற பாக்கெட்ல வளர்ந்திருக்கற மூணு மாச வயசு கன்றுகள, குறைஞ்ச விலைக்குக் கொடுக்குறோம். மத்த பண்ணைகள்ல பெரிய பை நிறைய மண் போட்டு அதிக விலைக்கு விப்பாங்க. அதனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. இந்த மாதிரி கண்துடைப்பு வேலையெல்லாம் நாங்க செய்யாததாலதான் குறைஞ்ச விலைக்கு விக்க முடியுது.
எங்க ஊர்ல அதிகபட்சம் 5 ரூபாய் வரைக்கும்தான் கன்னுகளோட விலை இருக்கும். பெரும்பாலும், விதை மூலமாதான் உற்பத்தி செய்றோம். இங்க உள்ள மரங்கள்ல இருந்தே விதை எடுத்துக்குவோம். தேவைப்பட்டா வெளியிலயும் வாங்கிக்குவோம். மேடான பகுதியில இருந்து மண்ணை வெட்டி, ஒரு டன் 500 ரூபாய்னு விக்கிறாங்க. அதைத்தான் நாத்து உற்பத்திக்குப் பயன்படுத்துறோம். ஊர்ல மாடுகள் இல்லாததால தொழுவுரத்தை வெளியில இருந்து வாங்குறோம். மண், பாக்கெட் செலவு, மண் நிரப்ப, நடவு செய்யனு எல்லா செலவும் சேர்த்து, ஒரு கன்னு உற்பத்தி செய்ய, 2 ரூபாய் செலவாகுது. விக்கும்போது கன்னுக்கு ஒரு ரூபாய்ல இருந்து மூணு ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆனா, அதிக எண்ணிக்கையில விற்பனையாகறதால போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது” என்று சந்தோஷமாகச் சொன்னவர், நாற்று உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

கன்று உற்பத்தி இப்படித்தான்!

கன்று உற்பத்திக்கு செம்மண் சிறப்பானது. நான்கு சால் புழுதி உழவு ஓட்டி, 7 அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட பார் அமைக்க வேண்டும். இதில் பரவலாக தேவையான விதைகளைத் தெளித்து அவற்றை மூடுமாறு தொழுவுரத்தைத் தூவ வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தினமும் தண்ணீர் விட வேண்டும்.
செம்பருத்தி, அரளி, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் மற்றும் அலங்காரச் செடிகளுக்கு (குரோட்டன்ஸ்) பதியன் முறையில் கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்து பாத்திகளை அமைத்து 4 முதல் 5 அங்குல நீளமுள்ள சிறியக் கிளைகளை, ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதை நடவு செய்தாலும், பதியன் முறை என்றாலும், 15-ம் நாள் முளைப்பு வரும். 25-ம் நாள் கன்றுகளை பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு மாற்ற வேண்டும். மூன்றரை அங்குல அகலம், 5 அங்குல உயரம் கொண்ட மெல்லிய பாலீதீன் பாக்கெட்டில் (நாற்று உற்பத்திக்காகவே பிரத்யேகமாக விற்கப்படுகிறது), முக்கால் பங்கு செம்மண்ணும், கால் பங்கு தொழுவுரமும் நிரப்பி, இதில் வேர் முழுமையாக மறையும் அளவுக்குக் கன்றை ஊன்றி விட வேண்டும். தினமும் காலை தண்ணீர் தெளித்து வர வேண்டும். மூன்று மாத வயதில் கன்றுகளை விற்பனை செய்யலாம்.

தொடர்புக்கு
கருப்பையா, செல்போன் : 91597-20827

காப்புரிமை – பசுமை விகடன்
PASUMAI VIKATAN

Sunday, June 23, 2013

மலைக்கவைக்கும் மலைவேம்பு

மலைவேம்பு வேப்பமரத்தையொத்த இலையுதிர்க்கும் ஆயில் குடும்ப மரவகையை சேர்ந்த மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரியமரவகைகளில் ஒன்று இதன் வளர்ச்சி மூங்கில், தேக்கு போன்ற மரங்களை ஒப்பிடும்போது மிக வேகமாக இருக்கிறது.  ஒட்டு முறையில் உருவாக்கப்படும் இம்மரங்கள் ஆரம்ப கட்டங்களில் செடியை காப்பாற்றும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதுமானது. பின் அதிக நீர் இல்லாமல், வறட்சியை தாங்கும் தன்மை படைத்தவை. அதனால்தான் விவசாயிகளிடையே வேகமாக பரவியது என்று கூட சொல்லலாம்.

இம்மரங்கள் பிளைவுட், தீக்குச்சி, காகிதம், கனரக வாகனங்கள் கட்டமைக்கவும் இம்மரம் பயன்படுகிறது. இம்மரம் எடை குறைவாகவும், கடினம் அதிகமாகவும் இருக்கும். இதனால் பல இடங்களில் இம்மரத்திற்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது. பிளைவுட்கம்பெனிகள் அறுவடைக்கு தயார் என்றால் அவர்களே வந்து மரங்களை வெட்டி எடுத்து செல்கிறார்கள். இம்மரங்களை கனரக வாகனங்களின் உபயோகிக்கும் பொழுது, வண்டியின் எடை வழக்கமானதை விட மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நெடு தூரம் செல்லும் வாகனங்களில் ஆயிரக்கணக்கில் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படுகிறது.

நடவு செய்யும் பொழுது ஒவ்வொரு செடிக்கும் 12 அடி இடைவெளி விட்டோம். அப்படி வைக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 300 மரங்கள் தேவைப்படுகிறது. ஆரம்ப  கட்டங்களில் சொட்டு நீர் மூலமாகவோ, நீர் பாய்ச்சலின் மூலமாகவோ செடியை பராமரிப்பது நல்லது. நம் மக்களிடையே உள்ள கெட்ட பழக்கங்களில் ஒன்று, இது போன்ற மரங்கள் நடவு செய்தால், பராமரிப்பு தேவை இல்லை என்று எண்ணி கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவது. அதனால் மரங்கள் பராமரிப்பின்றி வளரும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பராமரிப்பு தேவை இல்லாமலும் இம்மரம் வளரும், சரிதான். ஆனால், சிறு பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் மரங்கள் நன்றாகவும், செழிப்பாகவும் வளரும். அது விரைவில் அறுவடை செய்யவும், நல்ல மகசூல் பார்க்கவும் உதவும். ஒரு விவசாயி மஞ்சள் சாகுபடிக்கும், நெல் சாகுபடிக்கும் செய்யும் பராமரிப்பை ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை எனலாம். ஆனால், எதுவுமே செய்ய தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை.

மரம் 100 சென்டிமீட்டர் சுற்றளவையும், கிளை இல்லாமல் குறைந்தது 5 மீட்டர் உயரத்தையும் நெருங்கினால் அறுவடை செய்யலாம். இன்றைய தினத்தில் இப்படி இருக்கும் ஒரு மரம் ரூ.7000 முதல் ரூ. 8000 வரை மதிப்பிடப்படுகிறது. இம்மரம் 7 அல்லது 8 வருடங்களில் இருந்தே அறுவடை செய்யலாம் என கூறப்படுகிறது. ஆனால் என் அனுபவத்தில் தொடர்ந்து நீர் பாய்ச்சல் இருந்தால் தான் இக்குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயார் ஆகிறது. இல்லையேல், 8 - 10 வருடங்கள் கூட காத்திருக்க நேரிடும். இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு ஏக்கருக்கு 300 மரங்களுக்கு, ரூ 22 லட்சம் மகசூல் பார்க்கலாம். ஒரு வேலை மரம் தேவையான அளவு வளரும் முன்பே விற்க வேண்டும் என்றால், மொத்த மரமும் விறகுக்கு டன் கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 1 - 2 லட்சம் கூட தேராது. அதனால் மரம் வளரும் காலம் வரை கண்டிப்பாக காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.

மருத்துவ  பயன்கள்
  • டெங்கு காய்சலை குணப்படுத்துகிறது.
  • பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

Saturday, June 22, 2013

அதிகவரட்சியா, விவசாயம் செய்யமுடியவிள்லையா கவலைவேண்டாம் கைகொடுக்கும் முந்திரி சாகுபடி


நான் கல்லூரியில் படித்த நேரம் தினமும் காலை வேலையில் தோட்டத்திற்கு சென்றுவந்தபோளுது தரிசாக கிடந்தநிலத்தில்  விளையாடாக வைத்து பராமரித்த முந்திரிமரங்கள் இன்று பலன் தருகின்றன, முந்திரிசாகுபடிக்கு பெரிதாக பராமரிப்போ நீர்மேலன்மையோ தேவையில்லை வரட்சியைதான்கிவளரும், மரம் வைத்து 3 ஆண்டுகளில் வருமானம், கன்று விதைகள் மூலமாகவோ அல்லது ஓட்டுகன்றோ பயன்படுத்தலாம்...
 
அரசாங்கமும் முந்திரி சாகுபடிக்கு உதவுகிறது.... புதுக்கோட்டை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி சாகுபடி பயிற்சி மற்றும் ஜூஸ், சிரப் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி ஆண்டு தோறும் வழங்கபடுகிறது. மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன் 622 303 என்ற முகவரியிலோ, 0432 2290321 தொலைபேசி எண்ணிலோ, 9677485513 கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
     

Monday, March 11, 2013

உறுதியான உத்திரத்திற்கு மாஞ்சியம் மரம்



மாஞ்சியம் மரம் அக்கேசியா மற்றும் பட்டாணி குடும்பம், Fabaceae உள்ள பூக்கும் மர இனமாகும். ஹவாய்யை பிறப்பிடமாகக்கொண்ட  இம்மரம்   தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பலநாடுகளிலும் வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  மாஞ்சியம்  25-35 மீ  உயரம் வளரும் மரமாகும், வேகமாக வளரும் தன்மையுடைய இம்மரம் தேக்குமரங்கைவிட உறுதியானவை, இளைப்பு வேலைக்குசிறந்த மாஞ்சியம் சன்னல், கதவு, நிலைகள் மற்றும் கருவிகள் செய்யப்பயங்கடுகிறது. இதன் இலைகள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது, இலையை மாடுகளுக்கு கொடுத்தாள் அதிகம் பால்கறக்கும் பாலின்அடர்த்தியும் அதிகரிக்கும், போசாக்கு நிறைந்த இதன் இலைகள் நம் தோட்டத்தையும் வளப்படுத்தும்.

மாஞ்சியம் மரம் வணிகரீதியாக தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் தற்பொழுது வளர்க்கப்படுகிறது, வறட்சி தாங்கிவளரும்  தன்மையுடைய இம்மரகளை தரிசு மற்றும் மாணவரி நிலங்களில் வளர்பதின் மூலம் நிலங்களை 'ரியல் ஸ்டேட்ஸ்' காரர்களிடம் இருந்து காப்பாற்றமுடிம், வளர்பவர்களுக்கு வருமானமும் கிடைக்கும்.  

 நண்பர்களே படித்ததுடன் நான்கு மாஞ்சியம் மரம் வாங்கி நம்ம நிலத்தில வைங்க  அடுத்த தலைமுறைக்கு  உதவும்.