Monday, March 19, 2018

மரங்களின் பெயர்களை தெரிந்து கொள்வோமா!!!

இப்புவில் பலவிதமான தாவரங்கள் இருந்தாலும் நாம் அறிந்த தாவரங்கள் சிலவே! பலர் பலவிதமான மரங்களை வளர்க்க நினைத்தாலும் பலவிதமான மரங்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரிவதில்லை அவர்களுக்கு உதவும் பொருட்டு எனக்கு தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றை குறிப்பிடுகிறேன்: 

மா, பலா, கிளா, ஆழ், அரசு, அத்தி, இத்தி, அகத்தி,  இலுப்பை, பூவரசு, தடசு, உசில், புங்கன், வாகை, சிலைவாகை, நொச்சி, நுணா, புன்னை, மஞ்சநத்தி, கருங்காலி,  வாதநாராயணன், பனை,  கூந்தல்பனை, கமுகு , தென்னை, மூங்கில்,  அலின்ஸில், கொன்றை, சரக்கொன்றை, புளியமரம், புளிச்சகாய், கொடம்புளி, வேம்பு, தான்றி, காட்டத்தி, சந்தனம்,  செஞ்சந்தனம், ஆச்சா,  ஆவி,  தேக்கு, வெண்தேக்கு, பர்மாதேக்கு, குமிழ், மாஞ்சியம், மகோகனி, சிசு, மலைவேம்பு, நீர்வேம்பு, வேங்கை, உதிரவேங்கை, சந்தனவேங்கை, மருது, நீர்மருது, வெண்மருது, கருமருது, புல்லமருது,  கடம்பு,  மஞ்சக்கடம்பு, செண்பகம், பெருமரம்(பீநாறி), ஒதியமரம்,  முருங்கை,  சவுக்கு,  மகிழம், வன்னி,  ரோஸுட் (தோதகத்தி, ஈட்டி),  பென்சில், யானைகுன்றிமணி,  நாவல்,  வெண்நாவல், மலைநாவல்,  இலந்தை, நெல்லி,  விளாமரம், கொய்யா, சப்போட்டா,  மாதுளை,  சாத்துக்குடி, நாரத்தை,  பப்ளிமாஸ், அரைநெல்லி, எலுமிசை, கொடுக்காப்புளி, ஆப்பிள்,  பேரி,  மங்குஸ்தான்,  சொர்க்கம், புரசு, பாலை, வெப்பாலை,  குடசப்பாலை,  ஏழிலைப்பாலை,  குருந்தை, நற்குருந்தம்,  குங்குலியம், மந்தாரை,  இருவாட்சி(திருவாச்சி), காயா, பாதாம்,  நாய்கடுகு, முந்திரி, சீத்தா,  ராம்சீத்தா,  முள்சீத்தா,  துரியன், இலவு(இலவம்பஞ்சு),  ஈரப்பலா, எட்டி(காஞ்சிதை), வில்வம், மகாவில்வம்,  இராசவில்வம், பரசு வில்வம், உந்து  வில்வம் ,  நாகலிங்கம்,  கருவேலமரம்,  குடைவேல், வெள்வேல்,  கல்லத்தி,  கிளுவை,  தகரமரம்,  தில்லை,  தேற்றா(தேற்றான்கொட்டை), நெட்டுலிங்கம், அசோகமரம்,  சர்வ சுகந்தி, நாறுவல்லி, விடதாரி,   குசுக்கட்டை மரம்,  மனோரஞ்சிதம்,  லவங்கம், திவி, பதிமுகம், தங்க அரளி.

      எனக்கு தெரிந்த மரங்கள் சிலவற்றின் பெயர்களை பட்டியலிட்டுளேன் படிப்பவர்கள் அவற்றில் சில மரங்களையாவது வளர்த்து பயன்பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்          


Saturday, March 3, 2018

எனதுவனம்



8 ஆண்டுகளுக்குமுன் புதராக கிடந்த நிலத்தை தனி ஒருவனாக திருத்தி பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்தேன் இன்று அது ஒரு சிறுவனமாக காட்சியளிக்கின்றதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,   இந்தக்காட்டில் உள்ள மரங்களாவன தேக்கு, மகோகனி, முந்திரி, சந்தனம், செஞ்சந்தனம்,  வேங்கை, உதிரவேங்கை, குமிழ், சிலைவாகை, சிசு, யானைக்குண்டுமணி, வேப்பமரம்,  மஞ்சகடம்பு, சரக்கொன்றை, நீர்மருது, பூவரசு, பென்சில்மரம் போன்ற மரங்கள் உள்ளன.

இந்த மரங்களை குடும்பசகிதமாக சென்று பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது,   வொவ்வொரு மரமாக அண்ணார்ந்து பார்க்கும் பொது கிடைக்கும் மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது,  ஆனால் பலவித தொந்தரவுகளை தாண்டித்தான் இந்த மரங்களை வளர்க்க முடித்தது.

தற்பொழுதும் 2 ஆண்டுகளாக  நான் வளர்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் மூலிகை செடிகளுக்கு பலவிதமனா தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது,  அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன் 'ஆட்டைகொண்டுவந்து மேயவிட்டு பார்த்து கொண்டிருப்பது, அங்கு முளைத்திருக்கும் நாட்டு மரக்கன்றுகளை வேருடன் பிடிங்கிசெல்வது எல்லாவற்றிக்கும் மேலாக  குறிப்பிட்ட ஒரு செடியில் தினமும் சிறுநீர் கழிப்பது அல்லது சுடுதண்ணீர் ஊற்றுவது அதுவும் உதிரவேங்கை மரத்தில்' இதுபோன்ற இழிசெயல்களை என்னவென்று சொல்வது  'உதிரவேங்கை பட்டையின் தேவை நாளை உங்களளுக்கு ஏற்படும் என்று சபிப்பதைத்தவிர" மரங்களுக்கும் உணர்வு உண்டு என்பது இந்த 'மா'க்களுக்கு  தெறித்திருக்க வாய்ப்பில்லைதான்.