Monday, May 21, 2018

மரங்களின் வில்லன் "லொரந்தேசியே"



மரங்களின் வில்லன் லொரந்தேசியே ஒட்டுண்ணிச்செடி, இவை மரக்கிளைகளில் ஒட்டிக்கொண்டு மரத்தின் சாரைஉறின்சி  வாழும் ஒட்டுனிசெட்டியாகும், இது பெரும்பாலும் வேப்பமரங்களை தாக்கும், தற்போழுது குமிழ்,  மாஞ்சியம் போன்ற மரங்களையும் பெரிதும் தாக்குகின்றன, லொரந்தேசியே ஒருமரத்தில் வளர ஆரம்பித்துவிட்டாள் கிளைகளில் முடிச்சுகள் ஏற்படுத்தி ஒவ்வொரு கிளையாக பரவி சிலவருடங்களில் அந்தமரத்தையே படச்செய்துவிடும், இவை வளர ஆரம்பித்துவிட்டாள் அந்தமரம் அதன்பின் பெருக்காது ஒவ்வொரு கிளையாக படஆரம்பிக்கும் கடைசியில் அந்த மரமே பட்டுவிடும்.

பரவாமல் தடுக்க என்னசெய்வது!

லொரந்தேசியே பரவிய கிளையை வெட்டுவதுதான் பரவாமல் தடுக்கும் ஒரேவழி ஆரம்பநிலையிலேயே கிளைகளை வேண்டுவதன் மூலம் மற்றகிளைகளுக்கு பரவாமல் தடுக்கலாம், ஒருவகை வண்ணத்துப்பூச்சிகள் லொரந்தேசியே இலைகளை மட்டுமே உணவாக உண்ணும் அந்த வண்ணத்துப்பூச்சிகள் கொண்டுவந்து விடுவதன் மூலமும் லொரந்தேசியே ஒட்டுண்ணியை கட்டுப்படுத்தலாம், அந்த வண்ணத்துப்பூச்சிகள் குன்னக்குடி வேளாண்அறிவியல் மையத்தில் கிடைக்கும் ஆனால் நமது சீதோசனநிலையில் அவைகளால் இனப்பெருக்கம் செய்யஇயலாது எனவே அந்த வண்ணத்துப்பூச்சிகள் இறந்துவிடும் பல்கிப்பெருக்காது ஆகையால் வண்ணத்துப்பூசிகளைக்கொண்டு  லொரந்தேசியேயை கட்டுப்படுத்த முடியாது.                            

Wednesday, May 9, 2018

மகிழ்விக்கும் மகிழம் மரம்


மகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். இந்து மத வழக்கத்தின்படி சிவபெருமானுக்கு உரிய மரம். எனவே, சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது (பெரும்பாலும் தலமரமாக); அதன் காரணமாக இதன் பூ `சிவமல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. `வகுளா’, `பகுளா’ என்பவை சிவபெருமானின் வேறு பெயர்கள். மகிழ மரம் முருகன், திருமாலுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக முக்கியத்துவம்
திருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழ மரம் தல மரமாகக் காணப்படுகிறது. திருக்கண்ணன்குடியில் காலை, மாலை பூஜைகளிலும், திருக்கண்ணமங்கையில் மார்கழி மாத உற்சவத்துக்குப் பின்பு பத்து நாட்களுக்கு மாலை பூஜைகளிலும் மகிழம் பூ முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தின் சில சிவன் கோயில்களில் (வடக்கும்நாத க்ஷேத்திரத்தில்) பூரம் திருவிழா இந்த மரத்தின் அடியில் நடைபெறுகிறது. சந்திரமுகன் என்ற யக்ஷன் இந்த மரத்தில் உறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4: 10, 11) என்று பாடியுள்ளார்.
புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று. சாஞ்சி, அமராவதித் தூண்களில் பூக்களுடன் கூடிய மகிழ மரங்கள் காட்டப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
மகிழ மரத்தின் பயன்கள்
மகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன. மகிழம் பூவின் போதையூட்டும் மணம் (பல உயர்ரகச் சாராய வகைகளைப் போன்று) ஆண், பெண் இருவரிடமும் வயாக்ரா போலக் காம உணர்வைத் தூண்டுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மதுர ரசத்தில் கோரைக்கிழங்கு, முள்முருக்கு பூக்கள், நந்தியாவட்டை பூக்கள் அல்லது இலை சாற்றைக் கலந்து, அதில் மகிழ மரப் பூக்களை இட்டுப் பின்பு கொழுப்பு, பால், கோஷ்டம் ஆகியவற்றைக் கலந்தால் மகிழம்பூவின் இயல்பு மணம் மேலும் பெருகும் என்று விருக்ஷாயுர்வேதம் நூலில் சுரபாலர் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்சிஜன் அமுதசுரபி

 பூவின் எண்ணெயைத் தனியாகவோ, சந்தன எண்ணெயுடன் சேர்த்தோ ஊதுபத்தி, முகப்பூச்சு, கிரீம்கள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றில் நறுமணமூட்டியாக மகிழம் செயல்படுகிறது. பூச்சாறு பசியைத் தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும். மரத்தின் பட்டைத்தூளும் வயாகரா போன்று செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பட்டையையோ, பட்டை கொண்ட குச்சியையோ கொண்டு பல் துலக்கினால் ஆடும் பற்கள் நிலைத்து நிற்கும், ஈறு நோய்கள் குணமாகும், பல் சுத்தமாகும், பயோரியா நோய் குணமாகும், வாய்ப்புண்கள் மறையும். பல் பாதுகாப்புக்கான தலைசிறந்த தாவரங்களில் இது ஒரு முக்கியமான தாவரம்.
சிறுநீரகத்திலும், சிறுநீர்க்குழாய்களில் அதிக அளவு சளி போன்ற பொருட்கள் சுரப்பதைப் பட்டைத்தூள் உட்கொள்வது தடுக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தோல் வியாதிகள், கருப்பைக் கோளாறுகள் மற்றும் பலமின்மை, ரத்தச் சோகை, புண்கள் போன்றவற்றை மகிழம்பட்டை குணப்படுத்துகிறது.
பழங்குடிப் பயன்கள்
மகிழம் பழம் உண்ணத் தகுந்தது. விதை எண்ணெய், கண் சொட்டு மருந்தாகச் செயல்படுகிறது; உணவுக்குழாய் கோளாறுகளையும், மூட்டு வீக்கங்களையும் நீக்குகிறது. விதையின் பொடி கபம், பித்தத்தைப் போக்குகிறது; விஷ முறிவுக்கும் பயன்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி மகிழ மரத்தின் பூக்கள், இலைகள், பட்டை மற்றும் விதைகள் நுண்ணுயிர்க் கொல்லிகளாகவும், குடல் புழு நீக்கிகளாகவும், ஹெச்.ஐ.வி. நோய்த் தடுப்புப் பொருட்களாகவும், கல்லீரல் பாதுகாவலர்களாகவும், அறியும்திறன் மேம்படுத்திகளாகவும் செயல்படுகின்றன. பட்டை நார்கள் துணி நெய்வதற்கும், பட்டையிலிருந்து கிடைக்கும் சாயம் துணிகளுக்கு நிறமேற்றவும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.
நிழல் தரும் அற்புதங்கள்
பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூல் குறிப்பிடுவது போன்று ஆன்மிகக் காரணங்களுக்காக மட்டுமின்றி, இதர பயன்களுக்காகவும் மகிழ மரம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். கோயில் தவிர்த்து வீடுகள், பொது இடங்களில் இந்த மரம் வளர்க்கப்பட வேண்டும். இந்த மரத்தின் கார்பன் டை ஆக்ஸைடை நிலைப்படுத்தும் (Carbon dioxide sequestration) திறனும், ஒளிச்சேர்க்கைத் திறனும் மிகவும் சிறப்பானதாக இருப்பதால் பகலில் இதன் நிழல் அதிக ஆரோக்கியமான சூழலை (அதிக அளவு ஆக்ஸிஜனை) பெறலாம். கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் முக்கியமான மரங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணமாகவே தோன்றிய ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, அருணாசலேஸ்வரரை வேண்டிக்கொண்ட பின்பு, இந்த மரத்தின் நிழலில் உட்காரும் ஒருவருக்கு நோய்களும் கோளாறுகளும் நீங்கும்.
ஏறத்தாழ 300 வயதுக்கும் மேற்பட்ட மகிழ மரம் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் வழியிலுள்ள வேலாத்தூர் நாடியம்மன் கோயிலில் காணப்படுகிறது. இதன் நிழலில் சிறிது நேரம் தங்கிப் போகாதவர்களே இல்லை. நாமும் இந்த மரத்தை வளர்ப்பதன் மூலம், பேணி பாதுகாப்போம்.
நன்றி கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் 
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in