Monday, May 21, 2018

மரங்களின் வில்லன் "லொரந்தேசியே"



மரங்களின் வில்லன் லொரந்தேசியே ஒட்டுண்ணிச்செடி, இவை மரக்கிளைகளில் ஒட்டிக்கொண்டு மரத்தின் சாரைஉறின்சி  வாழும் ஒட்டுனிசெட்டியாகும், இது பெரும்பாலும் வேப்பமரங்களை தாக்கும், தற்போழுது குமிழ்,  மாஞ்சியம் போன்ற மரங்களையும் பெரிதும் தாக்குகின்றன, லொரந்தேசியே ஒருமரத்தில் வளர ஆரம்பித்துவிட்டாள் கிளைகளில் முடிச்சுகள் ஏற்படுத்தி ஒவ்வொரு கிளையாக பரவி சிலவருடங்களில் அந்தமரத்தையே படச்செய்துவிடும், இவை வளர ஆரம்பித்துவிட்டாள் அந்தமரம் அதன்பின் பெருக்காது ஒவ்வொரு கிளையாக படஆரம்பிக்கும் கடைசியில் அந்த மரமே பட்டுவிடும்.

பரவாமல் தடுக்க என்னசெய்வது!

லொரந்தேசியே பரவிய கிளையை வெட்டுவதுதான் பரவாமல் தடுக்கும் ஒரேவழி ஆரம்பநிலையிலேயே கிளைகளை வேண்டுவதன் மூலம் மற்றகிளைகளுக்கு பரவாமல் தடுக்கலாம், ஒருவகை வண்ணத்துப்பூச்சிகள் லொரந்தேசியே இலைகளை மட்டுமே உணவாக உண்ணும் அந்த வண்ணத்துப்பூச்சிகள் கொண்டுவந்து விடுவதன் மூலமும் லொரந்தேசியே ஒட்டுண்ணியை கட்டுப்படுத்தலாம், அந்த வண்ணத்துப்பூச்சிகள் குன்னக்குடி வேளாண்அறிவியல் மையத்தில் கிடைக்கும் ஆனால் நமது சீதோசனநிலையில் அவைகளால் இனப்பெருக்கம் செய்யஇயலாது எனவே அந்த வண்ணத்துப்பூச்சிகள் இறந்துவிடும் பல்கிப்பெருக்காது ஆகையால் வண்ணத்துப்பூசிகளைக்கொண்டு  லொரந்தேசியேயை கட்டுப்படுத்த முடியாது.                            

No comments: