Saturday, March 3, 2018

எனதுவனம்



8 ஆண்டுகளுக்குமுன் புதராக கிடந்த நிலத்தை தனி ஒருவனாக திருத்தி பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டு பராமரித்தேன் இன்று அது ஒரு சிறுவனமாக காட்சியளிக்கின்றதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,   இந்தக்காட்டில் உள்ள மரங்களாவன தேக்கு, மகோகனி, முந்திரி, சந்தனம், செஞ்சந்தனம்,  வேங்கை, உதிரவேங்கை, குமிழ், சிலைவாகை, சிசு, யானைக்குண்டுமணி, வேப்பமரம்,  மஞ்சகடம்பு, சரக்கொன்றை, நீர்மருது, பூவரசு, பென்சில்மரம் போன்ற மரங்கள் உள்ளன.

இந்த மரங்களை குடும்பசகிதமாக சென்று பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது,   வொவ்வொரு மரமாக அண்ணார்ந்து பார்க்கும் பொது கிடைக்கும் மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது,  ஆனால் பலவித தொந்தரவுகளை தாண்டித்தான் இந்த மரங்களை வளர்க்க முடித்தது.

தற்பொழுதும் 2 ஆண்டுகளாக  நான் வளர்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் மூலிகை செடிகளுக்கு பலவிதமனா தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது,  அவற்றுள் சிலவற்றை சொல்கிறேன் 'ஆட்டைகொண்டுவந்து மேயவிட்டு பார்த்து கொண்டிருப்பது, அங்கு முளைத்திருக்கும் நாட்டு மரக்கன்றுகளை வேருடன் பிடிங்கிசெல்வது எல்லாவற்றிக்கும் மேலாக  குறிப்பிட்ட ஒரு செடியில் தினமும் சிறுநீர் கழிப்பது அல்லது சுடுதண்ணீர் ஊற்றுவது அதுவும் உதிரவேங்கை மரத்தில்' இதுபோன்ற இழிசெயல்களை என்னவென்று சொல்வது  'உதிரவேங்கை பட்டையின் தேவை நாளை உங்களளுக்கு ஏற்படும் என்று சபிப்பதைத்தவிர" மரங்களுக்கும் உணர்வு உண்டு என்பது இந்த 'மா'க்களுக்கு  தெறித்திருக்க வாய்ப்பில்லைதான்.                        

3 comments:

sridharkannan said...

Super Sir. Nice..

srinivaas said...
This comment has been removed by the author.
Nanthakumar said...

Ji unga mobile no kudutha enakku usefull ah irukkum.

By,
Nanthakumar
7401436585